Saturday, March 11, 2017

PENCIL DRAWING - MATCH BOX


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -03-003-2017

                                 MATCH BOX

PENCIL DRAWING - MATCH BOX
PENCIL DRAWING - MATCH BOX
நெருப்பை சிறுபெட்டிக்குள் அடைக்க இயலும் என்று கண்டுபிடித்த அந்த அதிசய மனிதர் யார் என்றால், அவர்தான் ஜான் வாக்கர் என்ற ஒரு ஆங்கிலேய கண்டுபிடிப்பாளர்.
ஒரு முறை இந்த ஜான்வாக்கர் வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்திய துப்பாக்கியில் விரைவாக தீப்பற்ற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருந்தார். அப்பொழுது பொட்டாஷையும், ஆன்டிமணியையும் ஒரே குச்சியில் குழைத்துப் பூசினார். அந்தக் குச்சியோ தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்த சிறு இரும்புக் குண்டு அதன் மீது தவறி விழுந்து உரசியதில் தீப்பிடித்து எரிவதைக் கண்டார். அப்பொழுதிலிருந்து துப்பாக்கி சுடுவதை நிறுத்திவிட்டு இதுபோன்று பல நூறு குச்சிகளில் பொட்டாஷையும், ஆன்டிமணியையும் குழைத்துப் பூசி, மிருகங்கள், அதிக பறவைகள் நடமாடும் இடங்களில் ஊன்றி வைத்திருக்கிறார். அப்பொழுது அதன் வழியாக சென்ற விலங்குகள், பறவைகளின் உடல்களில் இந்த குச்சிகள் உரசியதில் தீப்பிடித்துக்கொண்டதாம்.
இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த ஜான்வாக்கர் என்பவர் வெறும் குச்சியில் தீப்பிடிக்கும் முறையை மட்டும்தான் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு அனைவராலும் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இவர் கண்டுபிடித்த குச்சி முறை எதில் உரசினாலும் தீப் பிடிக்கும் வகையில் அமைந்ததே இந்த எதிர்ப்புக்குக் காரணம். அதன் பிறகு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பெட்டியின் இருபுறங்களிலும் பாஸ்பரசைத் தடவி அதில் தேய்த்தால் மட்டுமே தீப்பிடிக்கும் வகையில் பாதுகாப்பான முறையை ஸ்வீடனைச் சேர்ந்த ஜான், காரல் லன்டஸ்ட்ராம் இருவரும் கண்டு பிடித்தனர். அதன் பிறகு பெட்டிக்குள் தீ அடைக்கப்படுவதால் இதற்கு தீப்பெட்டி என்று பெயரிட்டு இந்த உலகம் மகிழ்ந்தது

PENCIL DRAWING -BETTA FISH

                          PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -03-003-2017
                                  BETTA FISH

                     ''சியாம் சண்டை''மீன்
PENCIL DRAWING -BETTA FISH
PENCIL DRAWING -BETTA FISH


  ''சியாம் சண்டை'' மீன் (betta fish).
தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது.
மலேசியா, தாய்லாந்து,இந்தோனிசியா மற்றும் வியாட்நாம் போன்ற நாட்டுகளின் இவ்வகை மீன்களை அதிகம் காணலாம்.
இயல்பாக ''சியாம் சண்டை மீன்களை வயல்வெளி மற்றும் குளங்கள் என நன்னீர் பகுதிகளில் வாழக்கூடியது.
ஆனால் அதிகளவில் இம்மீன்கள் அலங்கார மீன்களாக தொட்டிக்குள் வைத்தே வளர்க்கப்படுகின்றன.
வெறும் 1 அங்குலத்திற்கும் குறைவாக வளரக்கூடிய இவ்வகை மீன்களை உணவுக்காக பயன்படுத்த முடியாது. ஆனாலும் அனைவராலும் இம்மீன்கள் விரும்பப்படுவதர்கான காரணம் இவைகளின் அழகுதான்.
பெண் மீன்களை விட ஆன் மீன்களே அழகாக இருக்கும். பெரும்பாலும் பெண் மீன்களுக்கு பிடரிகள் இருப்பதில்லை. அதனால் அழகிய பிடரிகள் கொண்ட ஆன் மீன்களையே பலரும் வளர்க்க விரும்புகின்றார்கள்.
ஒரே தொட்டிக்குள் இரண்டு ''சியாம் சண்டை'' மீன்களை வளர்க்க முடியாது. அப்படி ஒரே தொட்டியில் இரண்டு மீன்களை விட்டால் இரண்டும் மூர்க்கத்தமாக ஒருவருக்கொருவர் கொள்ளும். இறுதில் பலாமான மீன் பலவீனமான மீனை கொன்று விடும். இம்மீன்களின் இப்போர் குணத்தால்தான் இவைகள் சண்டை மீன் என்று அழைக்கப்படுகின்றது.
ஒரு தொட்டியில் ஆண்,பெண் என்று விட்டாலும் ஆண் மீன் பெண் மீனை கொன்று விடும். ஆண் மீன் அவ்வளவு போர்குணம் கொண்டது. எனவே இம்மீன்களை வளர்ப்பவர்கள் ஆண் மீன்களை தனியாகத்தான் வளர்ப்பார்கள். ஆனால் பெண் மீன்களோ ஆண் மீன்களைப் போன்று மூர்க்கத்தனம் கொண்ட்டதல்ல. ஒரு தொட்டியில் நான்கு அல்லது ஐந்து பெண் மீன்களை வளர்க்க முடியும்.
''சியாம் சண்டை'' மீன்களின் பாலியல் (sex ) முறை என்பது சற்று சுவாரசியமானது.
பொதுவாக, ஆண் சண்டை மீன்களுக்கு பாலியல் உணர்வு ஏற்படும் பொழுது தண்ணீரின் மேற்பரப்பில் எச்சில் குமிழ்களை மிதக்க விடும். அதை வைத்து பாராமரிப்பாளர்கள் இன சேர்க்கைக்காக பெண் மீனை ஆண் மீனின் தொட்டியில் விடுவார்கள்.
இன சேர்க்கை காலத்தில் மட்டும் ஆண் சண்டை மீன்கள் பெண் மீன்களை தாக்காது. இன சேர்க்கை முடிந்துவுடன் பெண் மீன் முட்டையிடும். பெண் மீனை முட்டைகளை இட்டவுடன் அந்த தொட்டியிலிருந்து எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் முட்டைகளை பெண் மீன் தின்றுவிடும்.
''சியாம் சண்டை'' மீன் இனத்தில் முட்டைகளை பாதுக்காக்கும் பொறுப்பு ஆண்களுடையது. முட்டைகள் பொறியும் வரை ஆண் மீன்களே முட்டைகளைப் பாதுக்காக்கும். முட்டைகள் பொறிந்தவுடன் குஞ்சிகளிடமிருந்து ஆண் மீனையும் பிரித்திட வேண்டும். இல்லையென்றால் தந்தையே குஞ்சிகளை தின்று விடும்.
குஞ்சிகளாக இருக்கும் பொழுது, சியாம் சண்டை மீன்களை ஒரே தொட்டியில் வளர்க்கலாம். சற்று வளர்ந்தவுடன் ஆண் குஞ்சிகளை தனித்தனி தொட்டிகளுக்கு மாற்றிவிடுவது நல்லது.
இன்று பல நாட்டுகளில் மக்கள் சியாம் சண்டை மீனை செல்லப் பிராணியாக வளர்க்கின்றார்கள். அதே நேரத்தில் தொடர்ந்து சியாம் சண்டை மீன்கள் பல வர்ணங்களிலும் வகைகளிலும் உருவாக்கப்படுகின்றன.
குறைந்த செலவில் ஒரு செல்லப்பிராணியை நீங்கள் வளர்க்க விரும்பிளால் ''சியாம் சண்டை'' மீன்களே ஒரு சிறந்த தேர்வு.


PENCIL DRAWING - LADY

  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -02-03-2017
             
                                LADY


PENCIL DRAWING - LADY
PENCIL DRAWING - LADY

PENCIL DRAWING - GIRL

                         PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -01-03-2017
               
                                    GIRL


Friday, March 10, 2017

PENCIL DRAWING - ARTIST MANJUSREE


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -19-02-2017



                       ARTIST MANJUSREE 

PENCIL DRAWING - ARTIST MANJUSREE
PENCIL DRAWING - ARTIST MANJUSREE


PENCIL DRAWING - ACTOR SURULI RAJAN


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -19-02-2017

                    ACTOR SURULI  RAJAN


 PENCIL DRAWING - ACTOR SURULI  RAJAN
 PENCIL DRAWING - ACTOR SURULI  RAJAN


50 படங்களில் ஒரே ஆண்டில் நடித்த சுருளிராஜன்!
சுருளிராஜன்
Suruli Rajan
சுருளிராஜன் பெரியகுளத்தைச் சேர்ந்தவர். 14-1-1938-ல் பிறந்தார்.
தந்தை பெயர் பொன்னையா பிள்ளை. பெரியகுளத்தில் “கணக்குப்பிள்ளை வீடு” என்றால், அது சுருளிராஜன் வீட்டைக் குறிக்கும்.
எம்.ஆர்.ராதாவின் குரல் எப்படி வித்தியாசமானதோ, அதுபோல் மாறுபட்ட குரல் வளம் கொண்டவர் சுருளிராஜன். ஒரு காலக்கட்டத்தில், நகைச்சுவை நடிப்பில் பெரும் புகழ் பெற்று விளங்கினார். ஒரே ஆண்டில் (1980) 50 படங்களில் நடித்தார்.
சுருளிராஜன் சிறுவனாக இருந்தபோதே, அவர் தாயும், தந்தையும் இறந்து விட்டனர். பண வசதி இல்லாத காரணத்தால் சுருளிராஜனின் படிப்பு 5-ம் வகுப்புடன் நின்றுவிட்டது. அதனால் சுருளிராஜன் மதுரையில் அவர் அண்ணன் வீட்டில் வளர்ந்தார்.
அங்கு ஒரு கார் ஷெட்டில் மெக்கானிக் வேலை பார்த்தார். இதில் கிடைக்கும் வருமானம் முழுவதையும் சினிமா பார்ப்பதில் செலவிட்டார்.
சினிமா, நாடகங்களில் நடிக்க வேண்டும் என்று அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. மதுரை பகுதியில் நடந்து கொண்டிருந்த நாடகங்களில் சிறு வேடங்கள் ஏற்று நடித்தார். 1959-ம் ஆண்டு சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்தார்.
பல கம்பெனிகளில் ஏறி இறங்கி சினிமா சான்ஸ் கேட்டார். அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. கையில் பணமும் இல்லை. பல நாட்கள் பட்டினி கிடந்தார்.
அதனால் மூட்டைப்பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள அவர் முயற்சி செய்தார். அப்போது ஒருவர் நாடகத்தில் நடிக்க அவரை அழைத்ததால் தற்கொலை முடிவை கைவிட்டார்.
பின்னர் “அய்யா தெரியாதய்யா” ராமராவ், எம்.என்.திரவுபதி ஆகியோரின் நாடகக் குழுவில் சேர்ந்தார். அதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. சி.ஏ.கே.தேவர், டி.என்.பாலு நாடகக் குழுவில் அப்பா வேடங்களில் நடித்தார்.
1962-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் தி.மு.கழக தேர்தல் நிதிக்காக கருணாநிதி “காகிதப்பூ” என்ற நாடகத்தை நடத்தினார். இதில் சுருளிராஜன் நடித்தார்.
“ஞான சவுந்தரி”, “விஜயபுரி வீரன்” முதலிய படங்களைத் தயாரித்த ஜோசப் தளியத், சுருளிராஜன் நடித்த ஒரு நாடகத்தைப் பார்த்தார். சுருளிராஜனின் நடிப்பும், வித்தியாசமான குரலும், வசனம் பேசும் முறையும் அவரைக் கவர்ந்தன.
தான் தயாரிக்க இருந்த “காதல் படுத்தும் பாடு” படத்தில், நகைச்சுவை வேடத்தில் நடிக்க சுருளிராஜனை ஒப்பந்தம் செய்தார்.
கலைஞானம் கதை – வசனம் எழுதிய முதல் படம் இது. வாணிஸ்ரீ, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் அறிமுகமான படமும் இதுதான். படத்தின் கதாநாயகன் ஜெய்சங்கர்.
1966-ல் வெளிவந்த “காதல் படுத்தும் பாடு” வெற்றிப்படமாக அமைந்தது. சுருளிராஜனின் நகைச்சுவை, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதன்பின் “நான்”, “மூன்றெழுத்து”, “பால்மனம்”, “குழந்தை உள்ளம்”, “அஞ்சல் பெட்டி” முதலான படங்களில் நடித்தார்.
எம்.ஜி.ஆர். நடித்த “எங்க வீட்டு பிள்ளை” படத்தில், “நான் ஆணையிட்டால்…” பாடல் காட்சியில் இடம் பெற்றவர்களில் சுருளிராஜனும் ஒருவர்.
ஏ.பி.நாகராஜன் தயாரித்த “திருமலை தென்குமரி” படத்தில், மனோரமாவுடன் இணைந்து நகைச்சுவை விருந்தளித்தார்.
திருமலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் காட்சியில் சுருளிராஜனின் நகைச்சுவை, ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
தரையில் உருண்டு கொண்டே வரும் சுருளிராஜன், திடீரென்று எழுந்து, “வத்திப் பொட்டியையும் பதினைந்து பைசா துட்டையும் மறந்துவிட்டு வந்துட்டேன். அதை எடுத்துட்டு வர்றேன்” என்று ஓடுவார்.
நினைத்தாலே, சிரிக்க வைக்கும் காட்சி. தொடர்ந்து “தேன்கிண்ணம்”, “யாரைத்தான் நம்புவது”, “அக்காவுக்கு கல்யாணம்” என்று பல படங்களில் நடித்தார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த “ஆதிபராசக்தி” மூலம் பெரும் புகழ் பெற்றார்.

PENCIL DRAWING - SQUIRREL


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -28-02-2017
                             
                             SQUIRREL
                                 
PENCIL DRAWING - SQUIRREL
PENCIL DRAWING - SQUIRREL

இந்திய அணில் (Indian palm squirrel, "Funambulus palmarum") என்பது ஒரு வகை அணில் ஆகும்.
இது மூன்று கோடுகளுள்ள அணில் என அழைக்கப்படுகின்றது.
இது செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றது. இது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது.
19ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மேற்கு ஆவுத்திரேலியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இயற்கையாக மற்ற விலங்குகளால் குறைவாக வேட்டையாடபப்டுவதால் சிறிய தீங்குயிராக மாறி, அழிக்கப்பட இலக்கு வைக்கப்பட்டது.

இதன் நெருங்கிய ஐந்து கோடுகளுள்ள அணில் வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது

Followers

J.ELANGOVAN.TRICHY