விநாயகர் ஓவியம் திருச்சி இளங்கோவன்
Wednesday, December 1, 2021
Friday, February 26, 2021
எங்கள் ஆசிரியர் பிறந்தநாள் விழா -25-02-2021
எங்கள் ஆசிரியர் பிறந்தநாள் விழா -25-02-2021
திருச்சி புத்தூர் பிஷப்ஹீபர் உயர்நிலைப்பள்ளி PT ஆசிரியர் உயர்திரு மார்டின் அய்யா அவர்களுக்கு, படிக்கும் காலத்தில் PULL UP BAR ல் ஏற்றிவிட்டு குச்சியால் அடிப்பீர்கள்..
அதன் அர்த்தம் இப்பொழுதுதான் தெரிகிறது..
வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும்...
ஆனால் ஏறுவதற்குதான் கஷ்டப்படவேண்டும்.
இறங்குவதற்கு ஒன்றும்செய்யவேண்டாம். தன்னால் இறக்கம் வந்துவிடும் என்பதை சிறுவயதில் உணர்த்தி இன்று எங்களை வாழ்க்கையில் உயர்ந்திட வைத்த வள்ளலே. உங்களின் 150 வது பிறந்தநாளிலும் நாங்கள் அனைவரும் இதுபோல ஒன்று கூடி ஆசிர்வாதம் வாங்க எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் கூப்பி வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி ஐயா...
Thursday, October 15, 2020
Tuesday, March 12, 2019
DR RADHAKRISHNAN AWARD DATE : 07-03-2019
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சிறந்த முறையில் பணியாற்றிய முதல்வர்கள் , பயிற்சி அலுவலர்கள் மற்றும் பயிற்றுனர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா
இடம் : வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம்
நாள் : 07-03-2019
![]() |
| DR RADHAKRISHNAN AWARD |
![]() |
| DR RADHAKRISHNAN AWARD |
![]() |
| DR RADHAKRISHNAN AWARD |
![]() |
| DR RADHAKRISHNAN AWARD |
எழுத்தறிவித்தவன் இறைவன்..!
ஆசிரியராக பணி தொடங்கி, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளே ஆசிரியர் தினமாக (Teachers' day) ஆண்டு தோறும் செப்டம்பர் 5-ம் தேதி இந்தியாவில் கொண்டாப்படுகிறது.
ஆசிரியர்கள், சிறந்த வழிகாட்டிகளாக இருந்து வருகின்றனர். இதை யாரும் மறுத்து சொல்ல முடியாது. அனைவரும் ஏதாவது ஒருவகையில் ஆசிரியர்களுக்குக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.
ஆசிரியர் அரவணைப்புடன் கல்வி போதிப்பவர், மாணவனின் திறமைகளையும் வெளிக் கொண்டு வர விரும்புவர். எனவேதான் ஆசிரியர் பணியை 'புனிதமான தொழில்' (Noble Profession)என்கிறார்கள்.
'மாதா, பிதா, குரு, தெய்வம்' என இந்தியாவில் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்கு வழங்க இருக்கிறார்கள். இறைவனுக்குக் கூட ஆசிரியருக்கு அடுத்த இடம்தான்.
அறிவுப்படையை உருவாக்கும் பொறுப்பை கடமையாக கொண்ட ஆசிரியர்களை அனைவரும் போற்றி பாராட்டுவோம்.
டாக்டர் ராதாகிருஷ்ணன்..
ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய நாட்டின் முதல் குடிமகனாய் (ஜனாதிபதி) இருந்த பேராசிரியர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை வீராசாமி புரோகிதர்.
தன் திறமையால் பேராசிரியராகவும், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராகவும், இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றிய மேதை ராதாகிருஷ்ணன்..!
133 டாக்டர் பட்டங்கள்..!
இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்த ராதாகிருஷ்ணன நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். இவரைப் பல்வேறு விருதுகள் தேடி வந்தன. இள வயதிலேயே ராதாகிருஷ்ணன் பல நூல்களை எழுதித் தனது எழுத்தாற்றலை அனைவரும் அறியும்படி செய்தார். இவர் மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் அவர் ஆற்றிய சிறப்புரைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. டாக்டர் ராதா கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்களின் எண்ணிக்கை 133.
இவர் 1975, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன சாலை' எனப் பெயரிடப்படுள்ளது.
ஆசிரியர் தினத்தின் போது ஆசிரியர்களுக்கு மாநில விருதும், தேசிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது.
எளிமையான இல்லம்...
இந்தியாவின் 2-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவி காலம் முடிந்ததும், சென்னை மைலாப்பூரில் அவருடைய பெயரில் அமைந்துள்ள (டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை) அவருடைய சொந்த பங்களாவில் இறுதி காலம் வரை வாழ்ந்தார்.
அவர் எப்படி படாடோபமின்றி வாழ்ந்தாரோ அதே போல் அவர் வசித்த பங்களாவும் ஆடம்பரமான அழகு வேலைப்பாடுகள் இன்றி அன்று கண்ட நிலையில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
'கிரிஜா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பங்களாவில் இப்போது டாக்டர் ராதா கிருஷ்ணனின் மருமகள் இந்திரா கோபால் வசித்து வருகிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய புத்தகங்கள், பேனா உள்பட அனைத்து பொருட்களும் அவர் பயன்படுத்திய நிலையில் அப்படியே காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு உள்ளன.
அன்பு பரிசு..! குரு நிவாஸ்..!
ஆசிரியருக்கு மாணவர்கள் குருதட்சணையாக வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வரலாற்று சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைபள்ளியில் 31 ஆண்டுகள் தமிழாசிரியராக பணி புரிந்து வந்தவர் புலவர் வெங்கட்டராமன். இவர் எளிய நடையில் தமிழை கற்றுக் கொடுப்பதில் வல்லவர். அதுவும் திருக்குறளுக்கு விளக்கம் அளிப்பதில் அலாதி திறன் பெற்றிருந்தார். வெங்கட்டராமனின் "தமிழ் வகுப்பு" என்றாலே மாணவர்களுக்கு தெவிட்டாத மகிழ்ச்சியை தந்தது. அத்தோடு அனைவரிடமும் அன்புடனும் பழகி வந்தார்.
ஆசிரியர் பணியோடு அவர் நிற்கவில்லை. ஊரின் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டினார்.
ஓய்வு பெற்ற பிறகு ஏழ்மைதான் அவரது சொத்தாக இருந்தது. குடி இருப்பதற்கு வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். எத்தனையோ மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை காணச் செய்த இந்த ஆசானின் வாழ்க்கை நிலையை கண்டு முன்னாள் மாணவர்கள் பலர் அவருக்கு "குரு தட்சணை"யாக வீடு கட்டி கொடுக்க தீர்மானித்தனர்.
அவரிடம் படித்து தொழிலதிபர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் உள்ள முன்னாள் மாணவர்கள் பலர் குரு பக்திக்கு இலக்கணமாக திகழும் வகையில் மன முவந்து வழங்கிய நிதியினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீடு (குரு நிவாஸ்) குருசாமிபாளையம் அருகே உள்ள வண்டிப்பேட்டையில் கட்டப்பட்டது.
2009-ம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று புதிய வீட்டின் கிரகபிரவேசம் கோலாகலமாக நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களை புலவர் வெங்கட்டராமன் அட்சதை தூவி வாழ்த்தினார். முன்னாள் மாணவரும் உத்தரபிரதேசத்தின் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யுமான பழனிவேல், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் தனசேகரன், கவிஞர் சுப்பிரமணியம், உள்பட நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கிரக பிரவேசம் குறித்து புலவர் வெங்கட்டராமன் கூறும் போது, "சிறிய அளவில் செய்வதாக சொன்னார்கள். கூறினார்கள், இந்த அளவுக்கு பெரிதாக செய்திருப்பதை கண்டு நெஞ்சம் மகிழ்கிறது" என்றார்.
தாயும் தந்தையும் குழந்தையை உலகுக்கு தருகின்றனர். ஆனால், ஓர் ஆசிரியர் உலகத்தையை குழந்தைக்கு தருகிறார் என்றால் மிகை இல்லை.
![]() |
| ELANGOVAN |
Tuesday, October 10, 2017
Wednesday, October 4, 2017
kalakka povathu yaaru season 7
விஜய் டிவியின் SEASON 7 கலக்கப்போவது யாரில் நான் வரைந்த தெய்வத்திரு பாலையா அய்யா அவர்களின் என் ஓவியம்....
விஜய் டிவி க்கு நன்றி
நண்பர்களே..
இன்று 01-10-2017 இரவு 9.00 மணி அளவில் நடைபெற்று கொண்டுஇருக்கும் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீசன் 7 ல் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் திரு ஆனந்த்ராஜ் அவர்களின் ஆறு நிமிடத்தில் 120 பிரபலங்கள் வாய்ஸ் பேச காட்டப்பட்ட திரைப்பட நடிகர் படங்களில் நான் வரைந்த இந்த பாலையா அய்யா அவர்கள் ஓவியத்துடன் கூடிய படம் இடம்பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...
Check out Kalakka Povadhu Yaaru on Hotstar! https://www.hotstar.com/1000190340
![]() |
| kalakka povathu yaaru season 7 |
![]() |
| kalakka povathu yaaru season 7 |
![]() |
| kalakka povathu yaaru season 7 |
![]() |
| kalakka povathu yaaru season 7 |
Monday, September 18, 2017
Jiddu Krishnamurti pencil drawing
மனிதனுக்கு தேவை
மாற்றமல்ல; விழிப்பு உணர்வே! – ஜே.கிருஷ்ணமூர்த்தி.
J. Krishnamurthi.
Jiddu Krishnamurti
Indian write
![]() |
| Jiddu Krishnamurti pencil drawing |
நெருக்கடி நிலையை இந்தியாவில் அறிவித்திருந்த இந்திராகாந்தி, ஆலோசனைக்காக தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் வந்திருந்தார்.
‘‘நான் ஒரு புலியின் மீது ஏறி அமர்ந்துவிட்டேன். இறங்க முடியாமல் தவிக்கிறேன்’’ என்றார் இந்திரா.
‘‘புலியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்பதையும் அறிந்திருப்பீர்களே..?’’ என்றார் ஜே.கே.
‘‘அப்படியானால், என்னை நான் மாற்றிக்கொள்ளத்தான்
வேண்டுமா?’’ என்று இந்திரா கேட்க,
‘‘மாறுதல் என்பது தாற்காலிக சந்தோஷம் தரலாம். ஆனால், அதுவே தீர்வாகாது.மனிதனுக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’’ என்றார் ஜே.கே.
அதன் பின்னர், நெருக்கடிநிலை விலக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் நடந்து, பல்வேறுவழக்குகளில் கைதாகி, இந்திரா ஜெயிலுக்குப் போனார். மீண்டும் அடுத்த தேர்தலில் வெற்றி கிடைத்தது. அந்தச் சமயத்தில், ‘‘நான் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளைக் கேட்டு விழிப்பு உணர்வு அடைந்து, சோதனைகளைத் தாங்கிக்கொள்வது என முடிவு எடுத்தேன். அதன் பலனாகவே, மீண்டும் எனக்கு வெற்றி கிட்டியிருக்கிறது’’ என்று மனம் திறந்து சொன்னார் இந்திரா.
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் 1895-ல், ஒரு தாசில்தாரின் எட்டாவது
குழந்தையாகப் பிறந்தார் ‘ஜிட்டு’ கிருஷ்ணமூர்த்தி. அவரது பத்தாவது வயதில்
தாயார் மரணம் அடையவே, தந்தை நாராயணய்யா சென்னைக்குக் குடி பெயர்ந்து,அடையாறில் அப்போது அன்னிபெசன்ட் அம்மையாரின் தலைமயில் இயங்கி வந்த பிரம்ம ஞான சபையில் உதவிச் செயலாளராக வேலைக்குச் சேர்ந்தார். கிருஷ்ணமூர்த்தியும் அவரது தம்பி நித்யாவும் சபைக்குத் தத்துக்
கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலேய முறைப்படி கல்வியும், பல்வேறு நாடுகளில் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
குண்டலினி யோக முறையைக் கற்றுத் தேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.
1925-ம் ஆண்டு தம்பி நித்யாவின் மரணம், கிருஷ்ணமூர்த்திக்கு முழுமையான விழிப்பு உணர்வைக் கொடுத்தது. ‘ நெருங்கியவரின் மரணத்தின்போது நாம் கண்ணீர் வடிப்பது, உண்மையில் இறந்தவருக்காக அல்ல; நாம் முன்பு போல் வலிமையாக இயங்க முடியாது, அவர் மூலம் நமக்கு இனி சந்தோஷமோ, உதவிகளோ கிடைக்காது என்பதாலேயே அழுகிறோம்’ என்பதைக் கண்டுகொண்டார். 1929-ம் வருடம் ‘அனைத்துலக ஆசான்’ என்ற பட்டத்தையும், கோடிக்கணக்கான டொலர் மதிப்புள்ள சொத்துக்களையும் தூக்கி எறிந்த கிருஷ்ண மூர்த்தி, ‘‘நான் யாருக்கும் குருவாக இருக்க விரும்பவில்லை. எந்த அமைப்பிலும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இருந்தால்தான், மக்களுக்குச் சுதந்திரம் பற்றி என்னால் விளக்கிச் சொல்ல முடியும்’’ என்றார்.
‘‘கடவுள்கள், கோயில்கள், புனித நூல்கள், சாதியம், மொழிப்பற்று, தேசப்பற்று… எல்லாமே மனித ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை. மத மாற்றம், கொள்கை மாற்றம் போன்றவை மனித குலத்துக்கு எவ்வித நன்மையும் செய்யாது.
மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’’ என்று தனது 90-வது வயதில் மரணமடையும் வரை, உலகெங்கும் சுற்றிப் போதித்தார் ஜே.கே.
ஜே.கே வைப் புரிந்துகொள்ளவும், பின்பற்றி நடக்கவும் மிகக் கடினமானவர் என விமர்சனங்கள் உண்டு. ஆனால், ‘மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’ என்ற அவரது மந்திரச் சொல்லுக்கு இன்றுவரை மாற்றுக் கருத்து இல்லை.
நன்றி : எஸ்.கே.முருகன் , பாசீனிவாசன்
Sunday, September 17, 2017
RAJA DURAI
Whoever reads Ramayana they will feels presence of Rama. Whoever reads Mahabarata they will feels the presence of Krishna . Whoever tells the name of this begger the will blessed by my father.
-Yogi ramsuratkumar.
Vani Rajadurai.


















































