Tuesday, March 14, 2017

PENCIL DRAWING - ACTOR STEVEN SEAGAL

                      PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -15-03-2017

                     Actor  Steven Seagal  


 PENCIL DRAWING - ACTOR STEVEN SEAGAL
 PENCIL DRAWING - ACTOR STEVEN SEAGAL


 PENCIL DRAWING - ACTOR STEVEN SEAGAL
 PENCIL DRAWING - ACTOR STEVEN SEAGAL

                             
                            Steven Seagal
                                   Actor


Steven Frederic Seagal is an American actor, producer, screenwriter, director, martial artist, and musician who holds American, Russian, and Serbian citizenship. Wikipedia
Born: 10 April 1952 (age 64 years), Lansing, Michigan, United States
Height: 1.93 m
Spouse: Erdenetuya Seagal (m. 2009), more
Children: Ayako Fujitani, Kentaro Seagal, Dominic Seagal, Arissa Seagal, Kunzang Seagal, Annaliza Seagal, Savannah Seagal

PENCIL DRAWING - ACTOR M. R. Radha

                                                   PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -14-03-2017

                       ACTOR M. R. Radha


 PENCIL DRAWING  - ACTOR M. R. Radha
 PENCIL DRAWING  - ACTOR M. R. Radha


 PENCIL DRAWING  - ACTOR M. R. Radha
 PENCIL DRAWING  - ACTOR M. R. Radha

                                               M. R. Radha
                                                 Film actor


Madras Rajagopala Radhakrishnan Naidu, popularly known by his stage name, M. R. Radha, was an Indian film actor and politician. He was given the title of "Nadigavel" by E.V.R. Periyar in a stage, for his acting prowess. Wikipedia
Died: 17 September 1979, Tiruchirappalli
Children: Radha Ravi, Raadhika Sarathkumar, Nirosha 
Radha, more

Spouse: Dhanalakshmiammal Radha, M R Saraswathi

PENCIL DRAWING - ACTOR T.RAJENDAR

                      PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -13-03-2017

                  ACTOR T.RAJENDAR


PENCIL DRAWING - ACTOR T.RAJENDAR
PENCIL DRAWING - ACTOR T.RAJENDAR


PENCIL DRAWING - ACTOR T.RAJENDAR
PENCIL DRAWING - ACTOR T.RAJENDAR

3D PENCIL DRAWING

3D PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -12-03-2017



3D PENCIL DRAWING
3D PENCIL DRAWING

3D PENCIL DRAWING
3D PENCIL DRAWING


3D PENCIL DRAWING
3D PENCIL DRAWING


Saturday, March 11, 2017

PENCIL DRAWING - MOSQUITO


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -12-03-2017
                            
                               MOSQUITO


PENCIL DRAWING - MOSQUITO
PENCIL DRAWING - MOSQUITO









உலகளவில், மக்கள் அறிந்திருக்கும் கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும். 

அதிலும், சில கொசுக்கள், தங்களது வகையைச் சேராத கொசுக்களையே சாப்பிட்டு விடும். 

கொசுக்களின் பரிணாம வளர்ச்சி, ஓர் அற்புதமான நிகழ்வு. 

ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே.
 முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரியமுனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. 

கொசுவின் துணையுறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு மண் சட்டியில் தீ கணல் போட்டு அதில் பச்சை வேப்பிலை போட்டு அதன்மீது சிறிது மஞ்சள் தூளையும் தூவிவிடுங்கள். அப்புறம் பாருங்கள் ! அதிலிருந்து வரும் புகை கொசுவை விரட்டோ விரட்டுனு விரட்டிவிடும்.

ஒரு கொசுகூட இனி இருக்கக்கூடாது. அதற்கு என்ன வழி!

தேங்காய் நார்களை எரித்து அதன் புகையை வீட்டில் காண்பித்தாலும் ஒரு கொசுகூட இருக்காது!
கொசு தொல்லை ஒழிந்திட
மாம்பூவை எடுத்துக் கொள்ளுங்கள்.  வீட்டின் ஒரு பக்த்தில் நெருப்பை வைத்து அதன்மீது மாம்பூக்களை போடுங்கள். அதிலிருந்து வரும் புகையால் கொசு தொல்லை ஒழிந்துபேகும்!

கொசுவுக்கு பிடிக்காத வாசனை எது? 
தெரியுமா உங்களுக்கு!


அது பூண்டு வாசனை! இந்த பூண்டு வாசனையை கண்டா கொசுவுக்கு சுத்தமா பிடிக்காது! அதனால நீங்க பூண்டு சாப்பிட்டிங்கனா அந்த பூண்டு நாத்தம் தாங்காம கொசு ஓடியே போய்விடும்!

PENCIL DRAWING - Hema Sathyan - Gunasheela


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -11-03-2017
                             
         Hema Sathyan - Gunasheela

PENCIL DRAWING - Hema Sathyan - Gunasheela
PENCIL DRAWING - Hema Sathyan - Gunasheela

PENCIL DRAWING - Hema Sathyan - Gunasheela
PENCIL DRAWING - Hema Sathyan - Gunasheela


PENCIL DRAWING - LOVELY CHILD


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -10-03-2017
                             
                                LOVELY CHILD

PENCIL DRAWING - LOVELY CHILD
PENCIL DRAWING - LOVELY CHILD
PENCIL DRAWING - LOVELY CHILD
PENCIL DRAWING - LOVELY CHILD

PENCIL DRAWING - LOVELY CHILD
PENCIL DRAWING - LOVELY CHILD

PENCIL DRAWING - LOVELY CHILD
PENCIL DRAWING - LOVELY CHILD

PENCIL DRAWING - BUTTERFLY


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -10-03-2017

                                   BUTTERFLY


PENCIL DRAWING - BUTTERFLY
PENCIL DRAWING - BUTTERFLY


பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப் பூச்சி (butterfly) என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பதும் பலரையும் கண்டு களித்து இன்புற்ச்செய்யும். முட்டையிலிருந்து, குடம்பிநிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த அறிவியல் பெயரில் உள்ள லெப்பிசு (Lepis) என்பது செதில் என்று பொருள்படும், தெரான் (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள்படும். எனவே பட்டாம்பூச்சிகள் செதிலிறகிகள் என்னும் இனத்தைச் சேர்ந்தவை. பொதுவில் இரவில் இரை தேடும் விட்டில் பூச்சிகளும் இந்த செதிலிறகிகள் இனத்தில் அடங்குபவை.உண்மைப் பட்டாம்பூச்சிகள்(பாப்பிலியோனோய்டியா), தலைமைப் பட்டாம்பூச்சிகள் (எசுபெரியோடியா), அந்துப்பூச்சி பட்டாம்பூச்சிகள் (எடிலோய்டியா) முதலிய பலவும் இக்குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும்.40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இடை இயோசீன் சகாப்தத்துடன் பட்டாம்பூச்சிப் படிமங்கள் தொடர்புடையனவாக நம்பப்படுகிறது[1].

பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன

PENCIL DRAWING - Rabindranath Tagore


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -09-03-2017
                          Rabindranath Tagore



PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore

PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore



PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore

தமிழில் தேசியகீதம் 
தேசிய கீதம், கீதாஞ்சலி, சாந்தி நிகேதன், வங்காளம் ரபீந்திரநாத் தாகூர் நினைவில் கொள்ள இப்படி எத்தனை எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. சிறுவயதில் தாகூருக்கு வகுப்பறைகள் பிடிக்கவில்லை. வகுப்பறையின் ஜன்னல் வழியே தெரியும் மேகமும் பறவைகளும், செடி, கொடி, மரங்களும் அவருக்குக் கவிதைகளாகத் தெரிந்தன. தாகூர் அடையாளப்படுத்தும் விஷயமாக கவிதை மாறிப்போனது. மென்மையான மனிதர் தாகூர்.
ஆனால் வங்கப்பிரிவினையை எதிர்த்து அவர் நடத்தியதோ அழுத்தமான போராட்டங்கள். தாகூரின் வாழ்க்கையை வாசிக்கும் போது, ஒரு நல்ல கவிதையை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும்.
இனிய தமிழில் இந்திய தேசிய கீதம்...
வங்க மொழி...
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
இதன் நேரடி தமிழாக்கம்...
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.
ஆனால்... இதை அப்படியே உபயோகித்தால் தேசிய கீதத்தின் ராகம் வரவில்லை என்பதால் சொல்லாடல்களை சுருக்கி...
தேசிய கீதத்தின் உண்மையான பொருள் படும்படி அமைத்து...
மக்களின் மனங்களில் ஆள்பவள் நீயே
இந்திய வளங்களின் அரசி
பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டியம்
திராவிடம் ஒடிசா வங்கம்
விந்திய இமயம் யமுனா கங்கை
முக்கடல் நின் புகழ் பாடும்
உன்புகழ் பாடி மகிழ்வோம்
உன் ஆசி வேண்டி நிற்போம்
உன் வெற்றி தனையே புகழ்வோம்
இந்திய வெற்றியின் தாரகை நீயே...
இந்திய வளங்களின் அரசி
வெற்றி... வெற்றி... வெற்றி...
உனக்கே என்றும் வெற்றி..

தமிழாசிரியர் உயர்திரு. முத்துநிலவன் அவர்கள் அவரின் வலைபூ பக்கத்தில் http://valarumkavithai.blogspot.in/2013/07/blog-post_29

PENCIL DRAWING - ACTOR SYLVESTER STALLONE


                           PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -08-03-2017

        ACTOR SYLVESTER STALLONE



PENCIL DRAWING - ACTOR SYLVESTER STALLONE
PENCIL DRAWING - ACTOR SYLVESTER STALLONE


PENCIL DRAWING - ACTOR SYLVESTER STALLONE
PENCIL DRAWING - ACTOR SYLVESTER STALLONE

PENCIL DRAWING - MATCH BOX


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -03-003-2017

                                 MATCH BOX

PENCIL DRAWING - MATCH BOX
PENCIL DRAWING - MATCH BOX
நெருப்பை சிறுபெட்டிக்குள் அடைக்க இயலும் என்று கண்டுபிடித்த அந்த அதிசய மனிதர் யார் என்றால், அவர்தான் ஜான் வாக்கர் என்ற ஒரு ஆங்கிலேய கண்டுபிடிப்பாளர்.
ஒரு முறை இந்த ஜான்வாக்கர் வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்திய துப்பாக்கியில் விரைவாக தீப்பற்ற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருந்தார். அப்பொழுது பொட்டாஷையும், ஆன்டிமணியையும் ஒரே குச்சியில் குழைத்துப் பூசினார். அந்தக் குச்சியோ தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்த சிறு இரும்புக் குண்டு அதன் மீது தவறி விழுந்து உரசியதில் தீப்பிடித்து எரிவதைக் கண்டார். அப்பொழுதிலிருந்து துப்பாக்கி சுடுவதை நிறுத்திவிட்டு இதுபோன்று பல நூறு குச்சிகளில் பொட்டாஷையும், ஆன்டிமணியையும் குழைத்துப் பூசி, மிருகங்கள், அதிக பறவைகள் நடமாடும் இடங்களில் ஊன்றி வைத்திருக்கிறார். அப்பொழுது அதன் வழியாக சென்ற விலங்குகள், பறவைகளின் உடல்களில் இந்த குச்சிகள் உரசியதில் தீப்பிடித்துக்கொண்டதாம்.
இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த ஜான்வாக்கர் என்பவர் வெறும் குச்சியில் தீப்பிடிக்கும் முறையை மட்டும்தான் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு அனைவராலும் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இவர் கண்டுபிடித்த குச்சி முறை எதில் உரசினாலும் தீப் பிடிக்கும் வகையில் அமைந்ததே இந்த எதிர்ப்புக்குக் காரணம். அதன் பிறகு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பெட்டியின் இருபுறங்களிலும் பாஸ்பரசைத் தடவி அதில் தேய்த்தால் மட்டுமே தீப்பிடிக்கும் வகையில் பாதுகாப்பான முறையை ஸ்வீடனைச் சேர்ந்த ஜான், காரல் லன்டஸ்ட்ராம் இருவரும் கண்டு பிடித்தனர். அதன் பிறகு பெட்டிக்குள் தீ அடைக்கப்படுவதால் இதற்கு தீப்பெட்டி என்று பெயரிட்டு இந்த உலகம் மகிழ்ந்தது

PENCIL DRAWING -BETTA FISH

                          PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -03-003-2017
                                  BETTA FISH

                     ''சியாம் சண்டை''மீன்
PENCIL DRAWING -BETTA FISH
PENCIL DRAWING -BETTA FISH


  ''சியாம் சண்டை'' மீன் (betta fish).
தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது.
மலேசியா, தாய்லாந்து,இந்தோனிசியா மற்றும் வியாட்நாம் போன்ற நாட்டுகளின் இவ்வகை மீன்களை அதிகம் காணலாம்.
இயல்பாக ''சியாம் சண்டை மீன்களை வயல்வெளி மற்றும் குளங்கள் என நன்னீர் பகுதிகளில் வாழக்கூடியது.
ஆனால் அதிகளவில் இம்மீன்கள் அலங்கார மீன்களாக தொட்டிக்குள் வைத்தே வளர்க்கப்படுகின்றன.
வெறும் 1 அங்குலத்திற்கும் குறைவாக வளரக்கூடிய இவ்வகை மீன்களை உணவுக்காக பயன்படுத்த முடியாது. ஆனாலும் அனைவராலும் இம்மீன்கள் விரும்பப்படுவதர்கான காரணம் இவைகளின் அழகுதான்.
பெண் மீன்களை விட ஆன் மீன்களே அழகாக இருக்கும். பெரும்பாலும் பெண் மீன்களுக்கு பிடரிகள் இருப்பதில்லை. அதனால் அழகிய பிடரிகள் கொண்ட ஆன் மீன்களையே பலரும் வளர்க்க விரும்புகின்றார்கள்.
ஒரே தொட்டிக்குள் இரண்டு ''சியாம் சண்டை'' மீன்களை வளர்க்க முடியாது. அப்படி ஒரே தொட்டியில் இரண்டு மீன்களை விட்டால் இரண்டும் மூர்க்கத்தமாக ஒருவருக்கொருவர் கொள்ளும். இறுதில் பலாமான மீன் பலவீனமான மீனை கொன்று விடும். இம்மீன்களின் இப்போர் குணத்தால்தான் இவைகள் சண்டை மீன் என்று அழைக்கப்படுகின்றது.
ஒரு தொட்டியில் ஆண்,பெண் என்று விட்டாலும் ஆண் மீன் பெண் மீனை கொன்று விடும். ஆண் மீன் அவ்வளவு போர்குணம் கொண்டது. எனவே இம்மீன்களை வளர்ப்பவர்கள் ஆண் மீன்களை தனியாகத்தான் வளர்ப்பார்கள். ஆனால் பெண் மீன்களோ ஆண் மீன்களைப் போன்று மூர்க்கத்தனம் கொண்ட்டதல்ல. ஒரு தொட்டியில் நான்கு அல்லது ஐந்து பெண் மீன்களை வளர்க்க முடியும்.
''சியாம் சண்டை'' மீன்களின் பாலியல் (sex ) முறை என்பது சற்று சுவாரசியமானது.
பொதுவாக, ஆண் சண்டை மீன்களுக்கு பாலியல் உணர்வு ஏற்படும் பொழுது தண்ணீரின் மேற்பரப்பில் எச்சில் குமிழ்களை மிதக்க விடும். அதை வைத்து பாராமரிப்பாளர்கள் இன சேர்க்கைக்காக பெண் மீனை ஆண் மீனின் தொட்டியில் விடுவார்கள்.
இன சேர்க்கை காலத்தில் மட்டும் ஆண் சண்டை மீன்கள் பெண் மீன்களை தாக்காது. இன சேர்க்கை முடிந்துவுடன் பெண் மீன் முட்டையிடும். பெண் மீனை முட்டைகளை இட்டவுடன் அந்த தொட்டியிலிருந்து எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் முட்டைகளை பெண் மீன் தின்றுவிடும்.
''சியாம் சண்டை'' மீன் இனத்தில் முட்டைகளை பாதுக்காக்கும் பொறுப்பு ஆண்களுடையது. முட்டைகள் பொறியும் வரை ஆண் மீன்களே முட்டைகளைப் பாதுக்காக்கும். முட்டைகள் பொறிந்தவுடன் குஞ்சிகளிடமிருந்து ஆண் மீனையும் பிரித்திட வேண்டும். இல்லையென்றால் தந்தையே குஞ்சிகளை தின்று விடும்.
குஞ்சிகளாக இருக்கும் பொழுது, சியாம் சண்டை மீன்களை ஒரே தொட்டியில் வளர்க்கலாம். சற்று வளர்ந்தவுடன் ஆண் குஞ்சிகளை தனித்தனி தொட்டிகளுக்கு மாற்றிவிடுவது நல்லது.
இன்று பல நாட்டுகளில் மக்கள் சியாம் சண்டை மீனை செல்லப் பிராணியாக வளர்க்கின்றார்கள். அதே நேரத்தில் தொடர்ந்து சியாம் சண்டை மீன்கள் பல வர்ணங்களிலும் வகைகளிலும் உருவாக்கப்படுகின்றன.
குறைந்த செலவில் ஒரு செல்லப்பிராணியை நீங்கள் வளர்க்க விரும்பிளால் ''சியாம் சண்டை'' மீன்களே ஒரு சிறந்த தேர்வு.


PENCIL DRAWING - LADY

  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -02-03-2017
             
                                LADY


PENCIL DRAWING - LADY
PENCIL DRAWING - LADY

PENCIL DRAWING - GIRL

                         PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -01-03-2017
               
                                    GIRL


Friday, March 10, 2017

PENCIL DRAWING - ARTIST MANJUSREE


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -19-02-2017



                       ARTIST MANJUSREE 

PENCIL DRAWING - ARTIST MANJUSREE
PENCIL DRAWING - ARTIST MANJUSREE


PENCIL DRAWING - ACTOR SURULI RAJAN


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -19-02-2017

                    ACTOR SURULI  RAJAN


 PENCIL DRAWING - ACTOR SURULI  RAJAN
 PENCIL DRAWING - ACTOR SURULI  RAJAN


50 படங்களில் ஒரே ஆண்டில் நடித்த சுருளிராஜன்!
சுருளிராஜன்
Suruli Rajan
சுருளிராஜன் பெரியகுளத்தைச் சேர்ந்தவர். 14-1-1938-ல் பிறந்தார்.
தந்தை பெயர் பொன்னையா பிள்ளை. பெரியகுளத்தில் “கணக்குப்பிள்ளை வீடு” என்றால், அது சுருளிராஜன் வீட்டைக் குறிக்கும்.
எம்.ஆர்.ராதாவின் குரல் எப்படி வித்தியாசமானதோ, அதுபோல் மாறுபட்ட குரல் வளம் கொண்டவர் சுருளிராஜன். ஒரு காலக்கட்டத்தில், நகைச்சுவை நடிப்பில் பெரும் புகழ் பெற்று விளங்கினார். ஒரே ஆண்டில் (1980) 50 படங்களில் நடித்தார்.
சுருளிராஜன் சிறுவனாக இருந்தபோதே, அவர் தாயும், தந்தையும் இறந்து விட்டனர். பண வசதி இல்லாத காரணத்தால் சுருளிராஜனின் படிப்பு 5-ம் வகுப்புடன் நின்றுவிட்டது. அதனால் சுருளிராஜன் மதுரையில் அவர் அண்ணன் வீட்டில் வளர்ந்தார்.
அங்கு ஒரு கார் ஷெட்டில் மெக்கானிக் வேலை பார்த்தார். இதில் கிடைக்கும் வருமானம் முழுவதையும் சினிமா பார்ப்பதில் செலவிட்டார்.
சினிமா, நாடகங்களில் நடிக்க வேண்டும் என்று அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. மதுரை பகுதியில் நடந்து கொண்டிருந்த நாடகங்களில் சிறு வேடங்கள் ஏற்று நடித்தார். 1959-ம் ஆண்டு சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்தார்.
பல கம்பெனிகளில் ஏறி இறங்கி சினிமா சான்ஸ் கேட்டார். அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. கையில் பணமும் இல்லை. பல நாட்கள் பட்டினி கிடந்தார்.
அதனால் மூட்டைப்பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள அவர் முயற்சி செய்தார். அப்போது ஒருவர் நாடகத்தில் நடிக்க அவரை அழைத்ததால் தற்கொலை முடிவை கைவிட்டார்.
பின்னர் “அய்யா தெரியாதய்யா” ராமராவ், எம்.என்.திரவுபதி ஆகியோரின் நாடகக் குழுவில் சேர்ந்தார். அதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. சி.ஏ.கே.தேவர், டி.என்.பாலு நாடகக் குழுவில் அப்பா வேடங்களில் நடித்தார்.
1962-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் தி.மு.கழக தேர்தல் நிதிக்காக கருணாநிதி “காகிதப்பூ” என்ற நாடகத்தை நடத்தினார். இதில் சுருளிராஜன் நடித்தார்.
“ஞான சவுந்தரி”, “விஜயபுரி வீரன்” முதலிய படங்களைத் தயாரித்த ஜோசப் தளியத், சுருளிராஜன் நடித்த ஒரு நாடகத்தைப் பார்த்தார். சுருளிராஜனின் நடிப்பும், வித்தியாசமான குரலும், வசனம் பேசும் முறையும் அவரைக் கவர்ந்தன.
தான் தயாரிக்க இருந்த “காதல் படுத்தும் பாடு” படத்தில், நகைச்சுவை வேடத்தில் நடிக்க சுருளிராஜனை ஒப்பந்தம் செய்தார்.
கலைஞானம் கதை – வசனம் எழுதிய முதல் படம் இது. வாணிஸ்ரீ, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் அறிமுகமான படமும் இதுதான். படத்தின் கதாநாயகன் ஜெய்சங்கர்.
1966-ல் வெளிவந்த “காதல் படுத்தும் பாடு” வெற்றிப்படமாக அமைந்தது. சுருளிராஜனின் நகைச்சுவை, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதன்பின் “நான்”, “மூன்றெழுத்து”, “பால்மனம்”, “குழந்தை உள்ளம்”, “அஞ்சல் பெட்டி” முதலான படங்களில் நடித்தார்.
எம்.ஜி.ஆர். நடித்த “எங்க வீட்டு பிள்ளை” படத்தில், “நான் ஆணையிட்டால்…” பாடல் காட்சியில் இடம் பெற்றவர்களில் சுருளிராஜனும் ஒருவர்.
ஏ.பி.நாகராஜன் தயாரித்த “திருமலை தென்குமரி” படத்தில், மனோரமாவுடன் இணைந்து நகைச்சுவை விருந்தளித்தார்.
திருமலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் காட்சியில் சுருளிராஜனின் நகைச்சுவை, ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
தரையில் உருண்டு கொண்டே வரும் சுருளிராஜன், திடீரென்று எழுந்து, “வத்திப் பொட்டியையும் பதினைந்து பைசா துட்டையும் மறந்துவிட்டு வந்துட்டேன். அதை எடுத்துட்டு வர்றேன்” என்று ஓடுவார்.
நினைத்தாலே, சிரிக்க வைக்கும் காட்சி. தொடர்ந்து “தேன்கிண்ணம்”, “யாரைத்தான் நம்புவது”, “அக்காவுக்கு கல்யாணம்” என்று பல படங்களில் நடித்தார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த “ஆதிபராசக்தி” மூலம் பெரும் புகழ் பெற்றார்.

PENCIL DRAWING - SQUIRREL


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -28-02-2017
                             
                             SQUIRREL
                                 
PENCIL DRAWING - SQUIRREL
PENCIL DRAWING - SQUIRREL

இந்திய அணில் (Indian palm squirrel, "Funambulus palmarum") என்பது ஒரு வகை அணில் ஆகும்.
இது மூன்று கோடுகளுள்ள அணில் என அழைக்கப்படுகின்றது.
இது செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றது. இது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது.
19ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மேற்கு ஆவுத்திரேலியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இயற்கையாக மற்ற விலங்குகளால் குறைவாக வேட்டையாடபப்டுவதால் சிறிய தீங்குயிராக மாறி, அழிக்கப்பட இலக்கு வைக்கப்பட்டது.

இதன் நெருங்கிய ஐந்து கோடுகளுள்ள அணில் வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது

PENCIL DRAWING - SPARROW


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -26-02-2017

                             SPARROW

PENCIL DRAWING - SPARROW
PENCIL DRAWING - SPARROW
சிட்டுக் குருவி (Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,
ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்.
உடல் அமைப்பு ..
சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளைப் பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்.
வசிப்பிடம்..                                   
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவி இனங்கள் உள்ளன. இவை எங்கும் காணப்படுபவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன . இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன.
உணவுப் பழக்கம் ..
சிட்டுக் குருவிகள் அனைத்துண்ணிகள்.தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும்.
வாழ்க்கை முறை ...
சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.
சிட்டுக் குருவியின் வகைகள் ...
மெல்லிய கோடுகளைக் கொண்ட புல்வெளிக் குருவிகள்
மாலைச் சிட்டுகள்
காட்டில் வாழும் நரிச் சிட்டுகள்
வெண்கொண்டையும் வெண்மையான தொண்டையும் கொண்ட குருவிகள்
கறுப்புச் சிட்டுகள்
வெள்ளைக் கோடுகள் உடைய கொண்டையைப் பெற்றவை
என குருவிகளில் பல வகைகள் உள்ளன.

PENCIL DRAWING - ACTRESS KUTTY PADMINI


                PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -26-02-2017

            ACTRESS KUTTY PADMINI 



PENCIL DRAWING - ACTRESS KUTTY PADMINI
PENCIL DRAWING - ACTRESS KUTTY PADMINI 


Kutty Padmini
Movie actress
Kutty Padmini is a South Indian movie actress who predominantly works in Kollywood. She was a child star in her debut movie Ambala Anjulam. She has also acted in Telugu and Malayalam movies. Wikipedia
Born: 5 June 1956 (age 60 years), Chennai
Spouse: Prabhu Nepal
Shows: Ramanujar, Kalasam
Songs
Kozhi Oru Koottiley
Kuzhandaiyum Deivamum · 1965


PENCIL DRAWING - OSHO RAJNEESH

              
                   PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -19-02-2017


                       OSHO RAJNEESH


PENCIL DRAWING - OSHO RAJNEESH
PENCIL DRAWING - OSHO RAJNEESH

***ஓஷோ சிந்தனைகள்***
தம்மிடம் இல்லாத பணத்தைக் கொண்டு
தமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கி அடுக்கி தமக்குத் தெரியாதவர்களைக் கவர எண்ணுவது பலருக்கும் வாடிக்கை ஆகி விட்டது.
நமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.
பயம் கதவைத் தட்டுகிறதா?நம்பிக்கையோடு எழுந்து போய் கதவைத் திறக்க சொல்லுங்கள்.
வெளியே ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்களையும் அனுபவித்து விடுங்கள்.
நாளை, ஒருவேளை,திரும்பிப் பார்க்கையில் அவை தவற விடப்பட்ட பேரின்பமாகத் தெரியும்.
ரசித்ததை பொறாமை காரணமாக பாராட்டாத ஒருவன் கொலைகாரனுக்கு சமமாவான்.
கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.
நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் அவரைக் காண முடியாத படி கண்களை மூடி வைத்துக்கொள்கிறாய்.
எதையும் உனக்குத் தேவை என்று ஆசைப் படுமுன் மும்முறை நினைத்துப்பார்.
உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.
99% தேவையற்றதாகவே இருக்கும்.
அவை உன்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன.
உனக்குள்ளே நீ இருக்க அவை நேரமோ இடமோ தருவதில்லை.
கண்ணில் பட்ட சிறுமணல் எப்படி இந்த அழகிய உலகத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ, அதைப்போல,சிறிய தயக்கம் அல்லது சந்தேகம், இந்த வாழ்வின் பெருமை, அழகு, உங்கள் பலம் அனைத்தையும் மறைத்து விடும்.
வெற்றி என்பதில் எந்தத் தகுதியும் கிடையாது. உண்மையாகச் சொன்னால், அது மிகவும் அருவருப்பானது. ஒருவனைத் தோற்கடிப்பது என்பது அர்த்தம் இல்லாதது.
ஆனால் அதைத்தான் மனம் விரும்புகிறது.
வெற்றி என்பது நம் பழைய மிருக வாழ்க்கையின் மிச்சம்.
கோடிக்கணக்கில் மக்கள் ஒருவருக்கொருவர் தீர்ப்பு சொல்லிக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
சட்டம் என்பது தவறான மனிதனுக்கு உரியது. சரியான மனிதனுக்கு அல்ல.
ஏனென்றால்,இந்த முழு உலகமும் தவறான மனநிலையில் செயல் படுகிறது.
எப்போதாவது ஒரு சரியான மனிதன் வந்தால், அவனை ஒரு அயலான் போலத்தான் பார்க்கிறது.
முழுமை என்று எதுவும் இல்லை.வாழ்வின் முழுமை என்று தோன்றுவது ஒரு பொய்மைதான்.
ஒரு புத்திசாலி,வாழ்வு என்பது குற்றமற்ற நிறைவானது அல்ல என்று புரிந்து கொள்வான்.
அது எப்போதும் குறைகள் நிறைந்ததுதான்.
நாம் எல்லோரும் குறை நிறைந்தவர்கள் தான்.
ஒருவனிடத்தில்,இங்கே அங்கே உங்களுக்குப் பிடிக்காத சில குறைகள் இருக்கலாம்.
அதே சமயம் அவனிடம் நீங்கள் விரும்பும் சில நிறைவுகளும் இருக்கும்.
நீங்கள் ஒருவரை விரும்பினால் அவரை மாற்றவேண்டும் என்று அதற்கு அர்த்தம் இல்லை.
தகவல்....


Followers

J.ELANGOVAN.TRICHY