Saturday, August 26, 2017

ஆசிரியர் தினம்

இந்திய குடியரசு தலைவராக விளங்கிய டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5ம் தேதி பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ‘ஆசிரியர் தினம்‘ என கொண்டாடப்படுகிறது.

 டாக்டர் ராதாகிருஷ்ணன்
 டாக்டர் ராதாகிருஷ்ணன்

 டாக்டர் ராதாகிருஷ்ணன்
 டாக்டர் ராதாகிருஷ்ணன்

Former President of India
Sarvepalli Radhakrishnan was an Indian philosopher and statesman who was the first Vice President of India and the second President of India from 1962 to 1967. Wikipedia
Born: September 5, 1888, Thiruttani
Died: April 17, 1975, Chennai
Succeeded by: Zakir Husain
Children: Sarvepalli Gopal
Education: Madras Christian College (1905–1906), Voorhees College, University of Madras

Tuesday, August 8, 2017

ARTIST ELANGOVAN - GREEN TRICHY

GREEN TRICHY

ARTIST ELANGOVAN - GREEN TRICHY
 GREEN TRICHY

ELANGOVAN ART - SLEEPING BABY

SLEEPING BABY




குழந்தைகள் உறக்கம்...

என் வரைச்சித்திரத்துடன்....

                            புதிதாகப் பிறந்த குழந்தைகள் அதிக நேரம் உறங்குவார்கள். உண்மையில், இந்த சமயத்தில் உங்களுக்கு அதிகளவு உறக்கம் கிடைக்காவிட்டாலும், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை ஒவ்வொரு நாளும் 18 மணி நேரங்களை உறக்கத்தில் செலவிடுவான். ஆயினும், ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையின் உறங்கும்பாணி பெரியவர்களின் உறங்கும் பாணியைவிட வித்தியாசமானது. புதிதாகப் பிறந்த குழந்தைகள், தங்கள் உறங்கும் நேரத்தில் 20% மாத்திரம் ஒரு ஆழ்ந்த உறக்கத்தைக் கொண்டிருப்பார்கள். மீதி நேரங்களில் அங்கும் இங்குமாக உறங்குவார்கள். அதாவது அந்த சமயத்தில் உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையைப் படுக்கவைத்துவிட்டு நீங்கள் குட்டித் தூக்கம் போட முயற்சித்தால், அவன் விழித்தெழுந்து அழத் தொடங்குவான்.
சில புதிதாகப் பிறந்த குழந்தைகள் தங்கள் பகல் நேரங்கள் மற்றும் இரவு நேரங்களை ஒன்றாகக் கலப்பார்கள். அவர்கள் பகல் நேரத்தில் உறங்குவார்கள் மற்றும் இரவு நேரங்களில் விளையாட விரும்புவார்கள். இது தாங்கள் கருப்பையில் இருந்த நாட்களிலிருந்து கடத்தப்பட்டவை. கர்ப்ப காலங்களில், பிறவாத குழந்தை தாய் ஓய்வெடுக்கும்போது, பெரும்பாலும் இரவு நேரங்களில், மிக அதிக சுறுசுறுப்பாக இருப்பான்; தாய் எழுந்து நடமாடும்போது, பெரும்பாலும் பகல் நேரங்களில், அவன் சுறுசுறுப்பை மந்தமாக்குவான். ஒரு தாயின் சுறுசுறுப்பான இயக்கம் பிறவாத குழந்தையைச் சாந்தப்படுத்தி அவன் ஓய்வெடுப்பதற்கு உதவி செய்யும். பிறந்த பின்னர், சில புதிதாகப் பிறந்த குழந்தைகள் , அவர்களின் அளவுக்கதிகமாகக் களைப்படைந்த பெற்றோர் திகைப்படையும்வண்ணம் இந்தப் பாணியைத் தொடருவார்கள்.
உறக்கப் பிரச்சினையில், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் சரியான கண்ணோட்டத்தை விளங்கிக் கொள்ள முயற்சி செய்யவும். புதிதாகப் பிறந்த குழந்தைகள், வளர்ந்த குழந்தைகளை விட, குறுகிய நேர உறக்க சுழற்சி மற்றும் மிகவும் அடிக்கடி இலேசான உறக்க காலப்பகுதியைக் கொண்டிருப்பார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விழித்தெழ விரும்புவார்கள். ஒரு முறை விழிந்தெழுந்தால், திரும்பவும் உறங்குவதற்குச் சில சமயங்களில் அவர்களுக்குப் பிரச்சினை இருக்கும். அத்துடன், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு நாளில் 24 மணி நேரங்களில் தாய்ப்பாலூட்டுதல், ஏப்பம் விடுதல், டயப்ர் மாற்றுதல், மற்றும் விளையாடுதல் போன்ற தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எனவே, அவர்கள் நீண்ட நேரம் உறங்குவது என்பது அர்த்தமற்றது.

Sunday, August 6, 2017

RAKSHEE ARTS


Vethathiri Maharishi Aliyar


Vethathiri Maharishi Aliyar
Vethathiri Maharishi Aliyar

நண்பர்களே,
அருட்தந்தை அய்யாஅவர்களின்
என் வரைச்சித்திரத்துடன்
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..
எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
வாழ்க்கை வரலாறு....
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பமுதலி , முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார்.
இவரது குடும்பச்சூழலில் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்பத் தொழிலான தறி நெய்தலைச் செய்யத் தொடங்கினார்.
18வது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளைக் கற்றார் மகரிஷி.
தனது வாழ்க்கையின் குறிக்கோளாகிய முழுமையை உணரும் நோக்கத்தால் உந்தப்பட்டு; சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். மேலும் இரண்டாவது உலகப் போரின் போது முதலுதவிப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். பின்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்று, தனது சுய முயற்சியினால் பல்லாயிரம் நபர்களுக்கு வேலை அளிக்கக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய நெசவுத் தொழிற்சாலையை உருவாக்கினார்.
அச்சமயத்தில் அரசாங்கத் தொழிற்கொள்கை மாற்றம் காரணமாக வியாபாரம் திடீர் சரிவு நிலையை அடைந்தது; இருப்பினும் தன்னிடம் பணிபுரிந்த 2000 குடும்பங்களையும் காப்பாற்றுவதற்காக ஈட்டிய பொருள் அனைத்தையும் அவர்களுக்கே செலவழித்து அனைத்துப் பொருள் வளத்தையும் இழந்தார். அப்படியிருந்தும் மனத்தைத் தளரவிடாது மீண்டும் கடுமையாக உழைத்து படிப்படியாக பொருளாதாரத்தில் தன்னை மேம்படுத்திக் கொள்ள அரிசி வியாபாரம் போன்ற பல்வேறுபட்ட தொழில்களைச் செய்து தனக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் துன்பத்தைப் போக்கவும் பாடுபட்டார். தன் இரண்டு மனைவியருடைய மனத்தையும் நன்கு புரிந்தவராய் இருவரிடமும் பிணக்கின்றி அன்புடன் வாழ்ந்து காட்டினார்.
வறுமையிலேயே வாழ அடியெடுத்து வைத்த அவரது உள்ளத்தில் வறுமை என்றால் என்ன? கடவுள் என்பது எது? அதை ஏன் காண முடியவில்லை? மனித வாழ்க்கையிலேயே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன போன்ற கேள்விகள் அவ்வப்போது ஒலித்துக் கொண்டே இருந்தன. இவற்றிற்கு காரணங்கள் கண்டு தெளிவு பெறுவதற்காக ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விளைவாக தனது 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார். அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும்.

TRICHY ARTIST ELANGOVAN

YOGI RAMSURATKUMAR


திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய பிரம்ம தீர்த்தக்கரையில் புரவி மண்டபம் எதிரில் ஒரு மணி மண்டபம் அமைந்துள்ளது.தாண்டவ வேணான் என்பவர் 1972ம் ஆண்டில் இதை கட்டினார்.கிளி கோபுரத்திற்கு அருகில் தீப தரிசன மண்டபம் உள்ளது .இது 1202 ல் தோன்றியது.திருக்கார்த்திகை தீபத்தன்று பஞ்சமூர்த்திகள் இங்கிருந்தபடிதான் தீப தரிசனம் காண்பார்கள்.இதை கட்டியவர் மங்கையர்கரசியார்.
சரித்திரங்கள் மூலம் இவற்றை நாம் அறிவோம்.ஆனால் சாஸ்திரங்கள் கூறும் சகல லட்சணங்கள் பொருந்திய யோகி ராம் சுரத்குமார் என்கிற மஹாணை எண்ணில்லா மக்கள் கண்ணால் கண்டனர்.இதயத்தில் ஏந்தினர்,பயன் பல பெற்றனர்,பாராட்டி தொழுதனர்.
இந்த மஹானுக்கு உணவு ,உடை,குளியல்,இருப்பிடம் என எதுவும் முக்கியமில்லாது போய்விட்டது.அவரது உள்ளுணர்வு இறைவனின் வேலையாக ,யாருக்கு எங்கு,எப்போது,என்ன உதவி தேவையோ அப்போது அங்கு செல்லுமாறு கட்டளையிட்டது.ஏற்கனவே அவருக்கு இருந்த தேசப்பற்றும்,மக்கள் மீது இருந்த அன்பும்,வலுவடைந்தது .வேதங்கள் மீது இருந்த நம்பிக்கை அதிகமானது
பல நாட்கள் யோகியாருக்கு உணவு கிடைக்காது.சில நாட்களில் கெட்டுப்போன உணவே கிடைக்கும் .கிடைப்பது விருந்து உணவாக இருந்தாலும் ,காய்ந்த ரொட்டியாக இருந்தாலும் மகிழ்வோடு ஏற்றார்.
இனி யோகியார் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றி பார்ப்போம்.
தூத்துக்குடியை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் பாமா.தனது தோழியின் மூலமாக யோகியாரை பற்றி தெரிந்து ,அவரை நேரில் பார்க்காமலேயே மிகுந்த ப்க்தி,நம்பிக்கையுடன் வணங்கி வந்தார்.இவருக்கு 7 பிள்ளைகள் .கணவர் பிடிவாத குணமுடையவர்.தான் சொன்னபடிதான் எதுவும் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.
இந்நிலையில் மிகவும் முயன்று மூத்த பெண்ணுக்கு திருமண நிச்சய நிகழ்ச்சி நடந்தது.திருமணத்திற்கு முதல் நாள் குறித்தாகி விட்ட நிலையில் என்னால் எதுவும் செய்ய முடியாது.உன்னால் திருமணத்தை நடத்த முடிந்தால் பார்த்துக்கொள் ‘’என்ரு உறுதியாக சொல்லிவிட்டார் பாமாவின் கணவர்.
சின்ன சின்னதாக கைவேலைகள் செய்து கிடைக்கும் மிக சாதாரண வருமானத்தில் திருமணத்தை நடத்த முடியாமல் ,திருமணத்தை நிறுத்தவும் முடியாமல் மனம் இல்லாமல் கலங்கி தவித்தார்.பலரிடம் கடன் கேட்டு பார்த்தார்.யாரும் அவருக்கு உதவ முன் வரவில்லை.நிச்சயம் செய்த திருமணம் நின்று போனால் தனது மகளின் வாழ்க்கை பாழாகி விடுமே என்று அஞ்சினார்.அப்போதுதான் அவருக்கு யோகி யாரின் நினைவு வந்தது.
அதுவரை தான் நேரில் பார்த்திராத யோகியாருக்கு தனது மன பாரத்தை கொட்டி ஒரு கடிதம் எழுதினார்.
மகளின் திருமண நாள் நெருங்க நெருங்க,பாமாவின் தவிப்பு அதிகமாகியது.அவரது கணவரின் கல் மனம் கடுகளவும் கரையவில்லை.அதே நேரம் ,யோகியாரின் கருணை மழை பாமாவின் மீது பொழிந்தது.
ஆரம்பத்தில் பணம் இல்லை எனறு கைவிரித்தவர்கள் ,திடீரென்று வலிய வந்து பாமாவுக்கு பணம் கொடுத்து உதவினார்கள்.இந்த பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டாம்.உன்னால் எப்போது முடியுமோ அப்போது கொடுத்தால் போதும் என்று பெருந்தன்மையாக சொன்னார்கள்.
உதவி தேடிச்சென்ற போது எட்டி உதைக்காத குறையாக உதவ மறுத்தவர்கள் ,திடீரென ஒட்டி உறவாடுவது உதவுவது பாமாவிற்கு வியப்பை தந்தது.
எல்லாம் யோகியாரின் அற்புதமே என்று எண்ணியவர் தேடி வந்த உதவியை ஏற்றுக்கொண்டார்.அவர் எதிர்பார்த்ததையும் விட அவரது மகள் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த சம்பவத்திற்கு பின் பாமாவுக்கு யோகியாரின் மீது பக்தி பல மடங்கு உயர்ந்தது.
அதே நேரம்,அவர் எதிர்பார்க்காத அதிர்ச்சிகளும் காத்திருந்தன.உதவி கிடைத்த போது பக்தி நிலைக்குமா,வேறு தொல்லைகள் வந்தால் குறையுமா,மறையுமா என்பதை யோகியார் பார்த்திட,நினைத்தாரோ என்னவோ...பாமாவிற்கு அதன் பிறகு சில சோதனைகள் தொடர்ந்தன...
ஆம் அவருக்கு மூன்று முறை மாரடைப்பு வந்தது.பெயரே புரியாத சில நோய்களும் வந்து தொல்லை கொடுத்தன.ஆனால் யோகியார் மீது வைத்திருந்த பக்தியில் துளியும் குறைவில்லை.அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.பகவானை நம்பிக்கையோடு தொழுதார்.வந்த வியாதிகள் வந்த வழியிலேயே திரும்பி சென்றன.
இன்றைக்கு 74 வயது ஆனாலும் திருவண்ணாமலை வந்து தனது உயிர் காத்த யோகியாரின் உருவமும்,சமாதி தரிசனமும் கண்டு வணங்கி செல்கிறார் பாமா.

ARTIST ELANGOVAN TRICHY


















ARTIST ELANGOVAN

ARTIST - Rajiv Deshmukh
THANK YOU SIR




ARTIST ELANGOVAN

NEW VINAYAGAR

NEW VINAYAGAR
NEW VINAYAGAR



NEW VINAYAGAR
MODERN VINAYAGAR



என் வரைச்சித்திரத்தில்
எங்கள் பிள்ளையாரின் புதிய அவதாரம்....

ஔவையார் அருளிய வாழ்வை வளமாக்கும் *விநாயகர் அகவலை*
கீழே பார்க்கலாம்.

துன்பங்களில் இருந்து விடுபட இந்த அகவலை தினமும் சொல்லி வரலாம்..

***விநாயகர் அகவல்***

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரை கழல் சரணே!.

ARTIST ELANGOVAN - INDIA LEADERS


Honourable Mr Narendra Modi is 14th prime minister of India
Honourable Mr Narendra Modi is 14th prime minister of India

Honourable Mr Narendra Modi is 14th prime minister of India
Honourable Mr Narendra Modi is 14th prime minister of India


Honourable Mr Ram Nath Kovind is 14th President of India
Honourable Mr Ram Nath Kovind is 14th President of India

Honourable Mr Ram Nath Kovind is 14th President of India
Honourable Mr Ram Nath Kovind is 14th President of India


ELANGOVAN ART



ELANGOVAN ART
ELANGOVAN ART

ELANGOVAN ART
ELANGOVAN ART

என் வரைச்சித்திரத்துடன் வணங்குகிறேன்...
தமிழக மக்களின் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என மக்களால் அழைக்கப்படும் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
எம்.ஜி இராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி 17 , 1917 ஆம் வருடம் இலங்கையில் பிறந்தார்.
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 – டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
நாடங்களில் வாழ்வை தொடங்கிய நமது தலைவர் மக்கள் இதயத்தில் தெய்வமாக டிசம்பர் 24 , 1987 யில் மறைந்தார்.
50 வயதினை கடந்த மக்கள் மத்தியில் மட்டுமல்ல எம்ஜிஆர் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்த வள்ளல் தலைவர் ஆவார்.

Followers

J.ELANGOVAN.TRICHY